அரியலூர்

4 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி உயர்வு

DIN

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 4 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணி மாறுதல் செய்து ஆட்சியர் க. நந்தகுமார் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்த பி. தயாளன், பெரம்பலூர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்- தணிக்கை) அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்), வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த இ. மரியதாஸ், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார ஊராட்சி), வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (பொது) பணிபுரிந்த எஸ்.ஆர். மோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலக (வளர்ச்சிப்பிரிவு) மேலாளராகவும், ஆலத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்த சு. வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணி மாறுதல்: பெரம்பலூர் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணிபுரிந்த இளங்கோவன் பணி மாறுதலில், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு மேலாளராக பணிபுரிந்த த. செந்தில், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார் ஆட்சியர் நந்தகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT