அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
இதில், விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகள், பாலித்தின் பைகள், இடையூறாக கிடந்த கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். மேலும், அதிகப்படியாக வளர்ந்திருந்த புற்கள் அகற்றப்பட்டன. தூய்மைபடுத்தும் பணியில், விளையாட்டு மைதானத்தில் தங்கி பயிலும் மாணவர்கள், விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர். இந்த தூய்மைப் பணியினை இந்திய ஹாக்கி அணி வீரர் ரஜினிகாந்த் தொடங்கிவைத்தார்.