அரியலூர்

விஏஓவுக்கு மிரட்டல்:முதியவர் மீது வழக்கு

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சுள்ளங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ்(36). இவர் ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்தையும் கவனித்து வருகிறார்.கடந்த 18 ஆம் தேதி ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன்(65) என்பவர், கிராம நிர்வாக உதவியாளரிடம் ஏதோ கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், சாமிநாதனிடம் ஏன் இப்படி சண்டை போடுகிறீர் என்று கேட்டாராம்.
இதனால் அவர்கள் இருவருக்குமிடையே  வாய்த்தகராறு  ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜை தாக்கி,  கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து சாமிநாதனை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT