ஆண்டிமடம் விளந்தை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றது.
விளந்தை தேவாங்கர் தெருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலையில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்துவிளக்குப் பூஜையில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்றனர்.