உடையார்பாளையம் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவர் உள்பட 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகே பாப்பாங்குளத்தைச் சேர்ந்த ஆனந்தன், அவரது மனைவி வசந்திக்கிடையே(35) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து உடையார்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசந்தி வசித்து வந்தார். திங்கள்கிழமை இரவு ஆனந்தன், உறவினர் முருகனுடன்(42), உடையார்பாளையம் சென்று வசந்தியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ஆனந்தன், முருகன் ஆகியோர் வசந்தியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.