அரியலூர்

7 ஆவது ஊதிய குழு குறைகளைக் களைய ஓய்வூதியர்கள் கோரிக்கை

DIN

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.  சங்கச் செயலாளர் அரங்கசாமி, பொருளாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொங்கல் கருணை தொகை வழங்கப்படாதவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பாஷ்யம், சிதம்பரம், பட்டுசாமி, ராஜமாணிக்கம், தட்சணாமூர்த்தி, கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். இறுதியில் மா.கலியபெருமாள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT