அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வரலாற்றுத் துறைத் தலைவர் மேஜர் ஜி. இருளப்பன் தலைமை வகித்து பேசினார். பேராசிரியர்கள் பெ. செல்லத்துரை, ரா. தெய்வப்பிரகாசம், ஆனந்த குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ரத்தின ராஜமாணிக்கம் பங்கேற்று, மாணவர்கள் படிப்புடன், தங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக் கொண்டால் அவை வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக கிளைத் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, இளங்கலை மாணவர் அருள் வரவேற்றார். முடிவில் முதுகலை மாணவர் சி.விஜய் நன்றி தெரிவித்தார்.