முகப்பு
அரியலூர்

அரியலூரில் இடி, மின்னலுடன் மழை

அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையும் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Updated On : 22 மே, 2018 at 2:47 AM
பகிர்:

அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையும் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ததில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் அரியலூர் நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை 4.30 முதல் 5.30 வரை மணி வரை பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தாழ்வான பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ஜயங்கொண்டம், செந்துறை,திருமானூர், மீன் சுருட்டி, ஆண்டி மடம், தா. பழூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.