மே 23-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் தலைமையில் நடைபெறும் , இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.