அரியலூர்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

DIN

அரியலூரில் பொதுப் பணித் துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். 
அரியலூர் ராஜாஜி நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம். சேலம் பொதுப்பணித்துறை அலுவலக  அதிகாரி. இவரது மனைவி ஷோபனா (47) செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்ற நிலையில்,  புதன்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.  அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து  ஷோபனாவுக்கும்,அவரது கணவர் பன்னீர்செல்வத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஷோபானா வீட்டுக்கு வந்து பார்த்த போது,வீட்டின் பீரோவில் இருந்த 14 பவுன் நகை,ரூ. 24 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT