அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே செவ்வாய்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள நாகமங்கலம், தெற்கு குடிசல் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (32). இவரது நண்பர் ஏலாக்குறிச்சி அருகேயுள்ள செங்கராயன்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த ராமதாசு (26). இருவரும் அரியலூரில் இருந்து வி.கைகாட்டி நோக்கி பைக்கில் காட்டுப் பிரிங்கியம்,அய்யாநகர் என்ற இடமருகே வந்தபோது, விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்த பாலுசாமி (26) ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதி தேவேந்திரன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராமதாசு, பாலுச்சாமி அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.