கேரளத்துக்கு உதவுவதற்காக அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் நிதியுதவி
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரட்டிய நிதியை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரட்டிய நிதியை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
கேரளத்தில் அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-1 சார்பில் சக மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெ.கருணாகரன் தலைமையில் மாணவர்கள், ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் நேரில் வழங்கினர்.