அரியலூர்

வீடுசேதம்:  4 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

விக்கிரங்கமங்கலம் அருகே வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது. 
விக்கிரமங்கலம் அருகேயுள்ள அம்பலவர்கட்டளை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி அஞ்சலை(27). அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள்(45). இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அஞ்சலை வீட்டுக்கு வந்த மாரியம்மாள், அவரது மகன்கள் மணி(22), ஆனந்தன்(20), வேலன்(18) ஆகியோர் சேர்ந்து அஞ்சலையை தகாத வார்த்தையால் திட்டி வீட்டின் ஓடுகளை சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT