அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே எலி மருந்தை சாப்பிட்ட மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் யோகநாதன் (11). மனவளர்ச்சி குன்றியவர். கடந்த 6 ஆம் தேதி இச்சிறுனை, அவரது பெற்றோர், வீட்டில் விட்டுவிட்டு விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனர்.
அப்போது வீட்டின் சுவற்றின் மேல் இருந்த எலிமருந்தை யோகநாதன் எடுத்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் அச்சிறுவனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைகாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.