அரியலூர்

தேசிய போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ஊக்க தொகை

DIN

கடந்த 2017-2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை அண்மையில் வழங்கப்பட்டது.
அரியலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை  வகித்து, தேசிய அளவிலான பளுதூக்கும் விளையாட்டில் பதக்கம் வென்ற பி. மாருஷ்,கே. காயத்திரி, கையுந்துபந்து விளையாட்டில் பதக்கம் வென்ற ஆர். செண்பகம் ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000-மும், பூப்பந்துப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ப. தருண்குமாருக்கு ரூ.4000-மும் என காசோலையாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் வெ.ஜெயக்குமார் ராஜா மற்றும் பயிற்றுநர்கள் ஆர்.சதீஷ்குமார், ஆர். ஹரிகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT