அரியலூர்

இளைஞரைத் தாக்கிய 3 பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இளைஞரைத் தாக்கிய 3 பேர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம் அருகேயுள்ள சாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(27). கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இவரை, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(29), பாலமுருகன், சின்னதுரை(51), சேட்டு (எ) சங்கர் (43) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து ராஜ்குமாரின் தந்தை குப்புசாமி அளித்த புகாரின் பேரில்  ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன், சின்னதுரை, சங்கர் ஆகிய 3 பேரைக் கைது செய்து, தலைமறைவாக உள்ள பாலமுருகனைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT