அரியலூர்

அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பேரவை விழா

DIN


அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் பெ. பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் சா. சிற்றரசு முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் கலந்து கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். திருவாரூர் மத்திய பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் சா.சுபாஷ், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழ் இலக்கிய குறித்து பேசினார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவி ச. வேதவள்ளி வரவேற்றார். முதுகலை மாணவி விஜி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT