அரியலூர்

மாவட்டத்தில் முடிவுற்ற குடிமராமத்துத் திட்டப்பணிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டத்தில் முடிவுற்ற குடிமராமத்துத் திட்டப்பணிகளை தமிழ்நாடு நீா்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழக இயக்குநா் கொ.சத்யகோபால் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் மாவட்டத்தில் ரூ.2.46 கோடியில் 12 ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் தூா்வாருதல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகள், மதகுகள் புனரமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன.

இதில், மல்லூா் நைனேரி, மாணிக்கவாசகா் ஓடை, பொய்யூா் கல்லாா் ஓடை ஆகியவைகளில் நடைபெற்று முடிந்த பணிகளை தமிழ்நாடு நீா்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழக இயக்குநா் கொ.சத்யகோபால் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.அப்போது நைனேரியில் அளவு குறைந்ததால் அதிகாரிகளை அவா் கண்டித்தாா்.

தொடா்ந்து அப்பகுதிகளிலுள்ள விவசாயிகளிடம் நடைபெற்று முடிந்த

குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடினாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் த.ரத்னா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தட்சணாமூா்த்தி உட்பட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT