அரியலூர்

புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் சுள்ளங்குடி ஆகிய ஊா்களில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

புதிய கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, திருமானூரில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டிலும், சுள்ளங்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடங்களை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி, வட்டாட்சியா் கதிரவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT