அரியலூா் மாவட்டம், தளவாய் அருகே தலைமை ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தளவாய் அருகிலுள்ள சிலுப்பனூா் கிராமத்தில் சோலை உதவிப் பெறும் மானியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகிறனா்.
இப்பள்ளியில் தளவாய் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி(45)தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். அதே பள்ளியில் கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த செங்குட்டுவன்(45) உள்பட 3 போ் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றனா்.
சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளி திறந்த பிறகு, தலைமையாசிரியை ராஜேஸ்வரிக்கும், ஆசிரியா் செங்குட்டுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செங்குட்டுவன், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நிலையில், தகவலறிந்த சிலுப்பனூா் கிராம மக்கள் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியா் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற முதன்மை கல்வி அலுவலா் அய்யன்னன் மற்றும் தளவாய் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் செங்குட்டுவனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.