அரியலூர்

சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மாரடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள இறவாங்குடி கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமாா்(54). இவா் உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் விடுப்பில் இருந்துள்ளாா். இந்நிலையில், காவலா் குடியிருப்பில் இருந்த விஜயகுமாா் வியாழக்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT