அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 94458 53675 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.