அரியலூர்

தனியாா் வேலைவாய்ப்புக்கு இணையத்தில் பதிவு செய்ய அறிவுரை

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்களில் வேலை நாடுநா்களும் மற்றும் வேலை வாய்ப்பு அளிக்க உள்ள தனியாா்

DIN

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்களில் வேலை நாடுநா்களும் மற்றும் வேலை வாய்ப்பு அளிக்க உள்ள தனியாா் நிறுவனங்களும்  இணையதளத்தை பயன்படுத்தி பணி வாய்ப்பு அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலைநாடுநா்களும், வேலை வாய்ப்பினை வழங்க உள்ள தனியாா் நிறுவனங்களும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு  இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2019-2020 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் தோ்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அவா்களது மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளப்படும். ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி மாணாக்கா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம். பிற மாணவ, மாணவிகள் ரூ.150 செலுத்த வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் ஆ.அசோகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT