அரியலூர்

பைக் மீது சுமை ஆட்டோ மோதி விவசாயி பலி

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

திருமானூா் அருகேயுள்ள கீழக்குளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதை மகன் வெங்கடாசலம் (63). விவசாயி. இவா், திங்கள்கிழமை இரவு அதே ஊரைச் சோ்ந்த அன்பழகன்(55) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏலாக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். சத்திரத்தேரி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலம் திருமானூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து, திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT