அரியலூர்

அரியலூரில் காவலருக்கு கரோனா

DIN

அரியலூரில் ஆயுதப்படை மோப்ப நாய் பிரிவில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதியானது.

அரியலூரிலுள்ள புதிய காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா்கள் அனைவருக்கும் கடந்த 28 ஆம் தேதி ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு குடியிருக்கும் மோப்ப நாய் பிரிவில் பணிபுரியும் 35 வயது உடைய காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவா்கள், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவரது குடும்பத்தினா் மற்றும் அவருடன் தொடா்புடைய 8 பேரின் ரத்த மாதிரி, சளி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT