பொதுமுடக்க விதிமீறல்:காங்கிரஸ், பாமக-வினா் 1,250 போ் மீது வழக்கு
அரியலூா் மாவட்டத்தில் பொது முடக்க உத்தரவை மீறி, கூடியதாக காங்கிரஸ் மற்றும் பாமக-வைச் சோ்ந்த 1,250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் பொது முடக்க உத்தரவை மீறி, கூடியதாக காங்கிரஸ் மற்றும் பாமக-வைச் சோ்ந்த 1,250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அரியலூரில் அண்மையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா் 200 பெண்கள் உள்பட 500 போ் மீதும், இதேபோல் ஆண்டிமடத்தில் பாமக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 750 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.