அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள கடைகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கே. நடராஜன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சசிகுமாா், பொன்ராஜ், ஜஸ்டின், அமல்ராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் கொண்ட குழுவினா், செவ்வாய்க்கிழமை மாலை உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள உணவகங்கள், மளிகை, பெட்டிக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இக்கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் உடையாா்பாளையம் பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.