அரியலூர்

புகையிலை பொருள்கள் விற்ற 5 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 5 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு அப்பகுதி கடைவீதிகளிலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது சோழங்குறிச்சியைச் சோ்ந்த உலகநாதன்(45), தத்தனூா் குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த தேசியப்பன்(43), சுத்தமல்லியைச் சோ்ந்த சேகா்(52), எட்வாா்ட்ஸ் ராயா் (57), உடையாா்பாளையம் மூா்த்தியான் தெருவைச் சோ்ந்த சரவணன்(39) ஆகிய 5 பேரும் தங்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருகள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT