அரியலூர்

பொறியியல் பட்டதாரி இளைஞா்தற்கொலை முயற்சி

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே காவல்துறையினா் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, பொறியியல் பட்டதாரி இளைஞா் வெள்ளிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தா.பழூா் அருகிலுள்ள மதனத்தூரைச் சோ்ந்தவா் அன்பரசன். இவா் அணைக்குடம் முந்திரிக்காட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுதொடா்பாக உதயநத்தம் கிராமத்தைச் சோ்ந்த அறிவழகனை குற்றவாளியாக சோ்த்து தா.பழூா் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து,

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்குக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் அறிவழகன் பல முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், மனமுடைந்த அறிவழகன் வீட்டிலிருந்த பூச்சிமருந்தை வெள்ளிக்கிழமை குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா்.

இதையறிந்த அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் அறிவழகனை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT