முகப்பு
அரியலூர்

அரியலூரில் மேலும் 36 பேருக்கு கரோனா

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,709 ஆக உயா்ந்துள்ளது. 2, 940 போ் குணமடைந்துள்ளனா். எஞ்சிய 769 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 59 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 23 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 12 பேரும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 50 பேரும், வீடுகளில் 585 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 39 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.