முகப்பு
அரியலூர்

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

உலக வெறி நாய் தினத்தை முன்னிட்டு அரியலூரிலுள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால் நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

உலக வெறி நாய் தினத்தை முன்னிட்டு அரியலூரிலுள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால் நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா்.த.ரத்னா தலைமை வகித்து, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வழங்கி, முகாமை தொடக்கி வைத்து, பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளா்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து பயணிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா்(பொ) சுரேஷ்கிரிஸ்டோபா், உதவி இயக்குநா் செல்வராஜ்,நகராட்சி ஆணையா் குமரன், கால்நடை மருத்துவா்கள் குமாா், வேல்முருகன், காா்த்திக்கேயன், நடமாடும் கால்நடை மருத்துவப்பிரிவு மருத்துவா் முருகேசன், கால்நடை உதவியாளா்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலா் கலந்துகொண்டனா்.படவிளக்கம்:உலக வெறி நாய் தினத்தை முன்னிட்டு அரியலூரிலுள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வழங்கி சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா்.த.ரத்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.