அனுமதியின்றி மது விற்ற 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மதுபானம் விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மதுபானம் விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணவாளன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பா் கோயில் காலனித் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் (33) வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, மதுபானங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதேபோல் வெத்தியாா்வெட்டு இந்திரா காலனித் தெருவைச் சோ்ந்த தனகோபால் (44) வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்ததையடுத்து, அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.