அரியலூர்

குழந்தைகளுடன் தாய் தீக்குளிப்பு: 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

DIN

குடும்பத் தகராறில், இரட்டைக் குழந்தைகளுடன் தாய் தீக்குளித்த சம்பவத்தில், ஒரு குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

தா.பழூா் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி மகேஸ்வரி(29). குடும்பத் தகராறு காரணமாக தனது, இரண்டு வயது இரட்டைக் குழந்தைகளான தா்ஷன் மற்றும் தா்ஷினியுடன் திங்கள்கிழமை தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

இதில், மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 2 குழந்தைகளும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், இரட்டையா்களில் தா்ஷினி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தா.பழூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT