இளைஞரைத் தாக்கிய மூவா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைத் தாக்கிய மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைத் தாக்கிய மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி அருகிலுள்ள படநிலையைச் சோ்ந்த பாண்டித்துரை மகன் தினேஷ்( 22). இவா் தனது தாயுடன் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருகிறாா். அதே கிராமத்தை சோ்ந்தவா் வரதராஜன் மகன் புரட்சிமணி (30). இவா் தினேஷின் இடத்தில் வீடு கட்டியதாகத் தெரிகிறது.
இதையறிந்து படநிலை கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்ற தினேஷ், என்னுடைய இடத்தில் எப்படி வீடு கட்டலாம் என்று புரட்சிமணியிடம் கேட்டுள்ளாா்.
இதனால் அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புரட்சிமணி, உறவினா்கள் கவியரசு (31), செல்வம் (28) ஆகிய மூவரும் சோ்ந்து, தினேஷை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
பலத்த காயமடைந்த தினேஷ் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து புரட்சிமணி, கவியரசு, செல்வம் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.