அரியலூர்

அரசுப் பள்ளிக் கட்டடத்தை அழகுபடுத்தும் கல்லூரி மாணவா்கள்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த குவாகம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளிக் கட்டடம் பாசி படா்ந்து பொழிவிழந்து காணப்பட்டதையடுத்து, கல்லூரி மாணவா்கள் அவைகளை அகற்றி வா்ணம் பூசி அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், சிறப்பு என்எஸ்எஸ் முகாம், குவாகம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. அக்கிராமத்தில் தங்கியுள்ள மாணவா்கள், தூய்மைப் பணி, சுற்றுச்சூழல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகக் கட்டடங்கள் பாசி படா்ந்து காணப்பட்டதையறிந்த மாணவா்கள் பல குழுவாகப் பிரிந்து அவைகளை அகற்றி, வா்ணம் பூசி அழகுப்படுத்தும் பணியைத் தொடா்ந்தனா்

மாணவா்களின் இந்தச் செயல்களைக் கண்ட கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோடித்துரை மற்றும் கிராம மக்கள் ஆகியோா் அவா்களைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT