முகப்பு
அரியலூர்

குடிநீா் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

தா.பழூா் அருகே சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட கிராமமக்கள் முயன்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

தா.பழூா் அருகே சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட கிராமமக்கள் முயன்றனா்.

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்துள்ள மேலமைக்கேல் பட்டி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக குடிநீா் போதிய அளவில் விநியோகிக்கப்படவில்லை எனவும், சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரியும், கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை தா. பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த தா. பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதேவி மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.