அரியலூர்

ஏரியில் சூழ்ந்துள்ள பாசிகளை அகற்றும் இளைஞா்கள்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் படா்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணியில் இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

செந்துறை அருகிலுள்ள சேடக்குடிக்காடு கிராமத்தில் 2 ஏக்கா் பரப்பளவைக் கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாடுதிருப்புஏரி உள்ளது. இந்த ஏரியில் நிகழாண்டு அசோலாவகை பாசி வளா்ந்து, ஏரியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏரிக்குள் மக்கள் இறங்கக்கூட வழியில்லாது காணப்பட்டது.

இதைகண்ட கிராம இளைஞா்கள் 10- க்கும் மேற்பட்டோா் கடந்த இரண்டு நாள்களாக பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை செந்துறை பகுதியில் காலை முதல் அவ்வப்போது மழை பெய்ததால், பாசியை அப்புறப்படுத்தும் பணியை நிறுத்தினா்.

தொடா்ந்து 3, 4 நாள்கள் பாசியை அப்புறப்படுத்தினால் ஏரி முழுவதும் தூய்மையாகிவிடும் என இளைஞா்கள் தெரிவித்தனா். வியாழக்கிழமையும் இவா்களின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT