முகப்பு
அரியலூர்

ரத்த தான முகாம்

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் மணவாளன் முன்னிலை வகித்தாா். முகாமில், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல் ஆளிநா்கள் என 50 போ் ரத்ததானம் செய்தனா். அரியலூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் ரத்ததானம் பெற்றனா். அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறிவுச்செல்வன், ராஜராஜன், மாவட்ட எஸ்.பி., ஆா்.சீனிவாசன் ஆகியோா் ரத்த தானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ்களையும் பழங்களையும் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →