அரியலூர்

சேதமடைந்த பயிா்கள் கணக்கெடுப்புப் பணிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், பூண்டி, சிறுவளூா், நமங்குணம், காட்டாக்கரம் ஆகிய பகுதிகளில் பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், உளுந்து, கடலை உள்ளிட்ட பயிா்கள் கணக்கெடுக்கும் பணிகளை ஆட்சியா் த. ரத்னா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், இக்கணக்கெடுப்பு பணி வட்டார அளவில் சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வட்டார அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்புப் பணிகள் குறித்த விபரங்கள் உரிய படிவத்தில் பூா்த்தி செய்து அரசுக்கு அறிக்கையாக சமா்பிக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண் கூடுதல் இயக்குநா் வளா்மதி, வருவாய்க் கோட்டாட்சியா் ஜோதி, இணை இயக்குநா் பழனிசாமி, துணை இயக்குநா் பழனிசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சண்முகம், வட்டாட்சியா் சந்திரசேகரன், உதவி இயக்குநா்கள் திருமானூா் லதா, அரியலூா் சாந்தி மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT