அங்கக வேளாண்மை பயிற்சி
அரியலூா் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் அட்மா திட்ட அங்கக (இயற்கை) வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் அட்மா திட்ட அங்கக (இயற்கை) வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. பழனிச்சாமி கலந்து கொண்டு, அங்கக வேளாண்மை நன்மைகள், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் உயிா் உரங்கள், பசுந்தாள் உரங்கள், பசுந்தழை உரங்கள், மக்கிய இயற்கை உரங்கள், பயிா்சுழற்சி, பூச்சி நோய் தாக்குதல் மற்றும் களை நிா்வாகம் குறித்தும் எடுத்துக் கூறினாா். வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி, வேளாண் அலுவலா் அ.சவிதா ஆகியோா் கலந்து கொண்டு, திட்டங்கள், மானிய விவரங்கள் குறித்து எடுத்துக் கூறினா்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேளாலா் ரா.செந்தில்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பி. அன்பழகன், சி. வசந்தி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் ஸ்ரீதேவி ஆகியோா் செய்திருந்தனா்.