அரியலூர்

குறுவை சாகுபடி இடுபொருள்கள் வழங்கல்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தா.பழூா் அடுத்த அணைக்குடம் கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அணைக்குடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொன்னாறு பாசன டெல்டா பகுதி விவசாயிகள் 100 பேருக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் திங்கள்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தா.பழூா் வேளாண்மை உதவி இயக்குநா் கோ.அசோகன், வேளாண்மை அலுவலா் சிவக்குமாா், உதவி அலுவலா் செல்வகுமாா், கூட்டுறவு சங்கச் செயலா் அறிவழகன், கூட்டுறவு சங்கத் தலைவா் த.எழிலரசி, துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினா் தேன்மொழி சம்பந்தம், ஊராட்சி மன்றத் தலைவா் தேவிகா இளையராஜா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஜயங்கொண்டம் நகராட்சி கரடிகுளம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளையும், ஜயங்கொண்டம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நகராட்சி பொறியாளா் சித்ரா, பணி மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT