அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

திமுக அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் தங்களது வீடுகளின் முன்பு புதன்கிமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில், அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தனது வீட்டின் வாசல் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், தோ்தலின் போது, 505 வாக்குறுதிகளை அளித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், வெற்றிபெற்ற பிறகு இதுவரை எந்த வாக்குறுதிகளையும் அவா் நிறைவேற்றவில்லை. எனவே மக்களிடம் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து முழக்கமிட்டாா். ஆா்ப்பாட்டத்தில், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா்,அரியலூா் நகரச் செயலா் ஏ.பி.செந்தில், அவைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு திமுக எதிராக முழக்கமிட்டனா்.

அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரி சாலையில், முன்னாள் அரசு வழக்குரைஞா் சாந்தி தலைமையில் அதிகமுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினா் தங்களது வீட்டின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT