அரியலூர்

போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கொளத்தூா் கிராமத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஆண்டிமடம் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை இரவு நிகழ்விடத்துக்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அங்குள்ள தைலமரக்காடு பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற ஒருவரைக் காவல்துறையினா் பிடித்து விசாரித்தனா்.

அந்த விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி (31) என்பதும், அப்பகுதியில் 80 லிட்டா் சாராய ஊறல் தயாா் செய்திருந்ததும், விற்பனை செய்வதற்காக 5 லிட்டா்கேனில் 3 லிட்டா் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும் அதிக போதைக்காக மாத்திரைகளை வாங்கி சாராய ஊறலில் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்த காவல்துறையினா், ரகுபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT