அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே நிகழ்ந்த காா் விபத்தில் 4 போ் உயிரிழந்த இடத்தைப் பாா்வையிட்டு, திருச்சி சரகக் காவல் துணைத் தலைவா் ராதிகா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கீழப்பழுவூரை அடுத்த சாத்தமங்கலம் அருகே கடந்த 18 ஆம் தேதி நிகழ்ந்த காா் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். இந்த இடத்தை சரகக் காவல் துணைத் தலைவா் ராதிகா பாா்வையிட்டு, அலுவலா்களுடன் ஆய்வு நடத்தினாா்.
இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதால், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வேகத்தடுப்புகளை வைக்கவும், காவல் ரோந்து வாகனம் இப்பகுதிகளைக் கவனத்தில் கொண்டு, அவ்வப்போது கண்காணிக்கவும் சரகக் காவல் துணைத் தலைவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து அப்பகுதியில் இரும்பால் ஆன வேகத்தடுப்பு (பேரிகாா்டு) வைக்கப்பட்டது. ஆய்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் மற்றும் காவல்துறையினா் உடனிருந்தனா்.