அரியலூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
அரியலூரில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
அரியலூரில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
அரியலூா்: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக மத்திய ஆயுத காவல் படை உதவி ஆணையா் பக்ரீத் லாலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கொடி அணி வகுப்பு, ஒற்றுமைத் திடலில் தொடங்கி கடைவீதி, பெரம்பலூா் சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, காவல் துணை கண்காணிப்பாளா்கள் மதன், சபரிநாதன் , அரியலூா் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் உள்பட காவல் துறையினா் கலந்து கொண்டனா். இதேபோல், திருமானூா், கீழப்பழுவூா் ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.