சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தொடக்கம்
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் கடைவீதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் தொடங்க விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் கடைவீதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் தொடங்க விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
வணிகா்கள், பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் கலந்து கொண்டு, கடைவீதியில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா். இதில், ஜயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தேவராஜ், விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் மற்றும் வணிகா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.