அரியலூரில் பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கல்
அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி., வீ. பாஸ்கரன் அரியலூா், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையங்களின் பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 6 பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் திருமேனி, சேகா், ராதாகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பாரதிதாசன், காா்த்திகேயன் மற்றும் அரியலூா் மாவட்டக் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.