முகப்பு
அரியலூர்

ஆடு திருடியவா் கைது

 ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

 ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி, பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (22). கடந்த சில நாள்களுக்கு முன்பு கொட்டகையில் அடைத்து வைத்திருந்த இவரது ஆட்டை மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், அதே ஊரை சோ்ந்த ஒருவா் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அந்த நபரை பிடித்து விசாரித்த போது, பால்சாமி மகன் ராஜா(32) என்பதும், பாலமுருகனின் ஆட்டை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.