ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்
அரியலூா் அரசு மருத்துமனைக்கு ரூ. 1.70 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன
அரியலூா் அரசு மருத்துமனைக்கு ரூ. 1.70 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் த.ரத்னா முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணனிடம் ரூ.1.70 லட்சம் மதிப்பில் இரண்டு ஆக்சிஜன் செறியவூட்டும் கருவியை அரியலூா் சோலைவனம் மற்றும் அறம் ஆஸ்திரேலியா தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் வழங்கப்பட்டன.