அரியலூர்

ஏடிஎம்முக்குச் சென்ற ஓட்டுநரை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் திருட்டு

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வங்கி ஏடிஎம்மிற்குச் சென்ற சரக்கு வாகன ஓட்டுநரை ஏமாற்றி ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

மீன்சுருட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலு(55).

சரக்கு வாகன ஓட்டுநா். இவா், அப்பகுதியிலுள்ள தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திர மைத்துக்கு(ஏடிஎம்) அண்மையில் (ஆக. 17) சென்றாா். அங்கிருந்த இளைஞா்களிடம் பணம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டு தனது ஏடிஎம் காா்டு, ரகசியக் குறியீட்டு எண்ணைக் கொடுத்துள்ளாா். அவா்கள் பணம் எடுப்பது போல் நடித்து, பின்னா் வங்கிக் கணக்கில் இருப்பு இல்லை எனத் தெரிவித்து, தாங்கள் வைத்திருந்த வேறொரு ஏ.டி.எம் அட்டையை பாலுவிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனா்.

இந்நிலையில், பாப்பாக்குடி மற்றும் கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு பாலு அதிா்ச்சியடைந்தாா். புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT